
மக்களுக்கு ஹேப்பி நியூஸ்…தீபாவளியை முன்னிட்டு இவ்வளவு சிறப்பு பேருந்துகளா..?? ” தமிழக அரசு திட்டம்”…!!
தமிழகத்தில் தீபாவளி பண்டிகை நெருங்குவதால், ஆரவாரத்துடன் மக்கள் கூட்டம் அங்கும் மிங்கும் காணப்பட்டு வருகிறது. மேலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் தங்கி வேலை பார்க்கும் பணியாளர்கள் சொந்த ஊர்களுக்கு வருவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில், தமிழ்நாட்டில் உள்ள மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல 16,500 சிறப்பு பேருந்துகளை தமிழகம் முழுவதும் இயக்க அரசு முடிவு செய்து உள்ளது. மேலும், இந்த அறிவிப்பானது தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் வரும் அக்டோபர் 19ம் தேதி நடைபெறவிருக்கும் ஆலோசனை கூட்டத்திற்கு பின் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை!!


























