மீண்டும் மீண்டுமா…சென்னை மக்களே உஷார்!! அதி கனமழைக்கு வாய்ப்பு!!!
வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னத்தால் தமிழகத்தில் இன்று மிக அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
கனமழை:
தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயலின் பாதிப்பில் இருந்தே பொதுமக்கள் முழுவதுமாக வெளியே வரவில்லை. இந்நிலையில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் மாலத்தீவு பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவியுள்ளதால் நீலகிரி, கோவை, திருப்பூா், திண்டுக்கல், தேனி, விருதுநகா், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
3000 ஆசிரியர்கள் பணியிட மாற்றம் – அரசின் திடீர் உத்தரவு!
சென்னையை பொறுத்த வரையிலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக, மூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும், தற்போது தான் சென்னையில் பொதுமக்கள் பழைய நிலைமைக்கு கொஞ்சம் கொஞ்சமாக திரும்பி வரும் நிலையில் மீண்டும் எச்சரிக்கையாக இருக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில், மீனவர்களும் கடலுக்குள் மீன் பிடிக்க செல்வதை தவிர்க்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.