தமிழகத்தை தாக்கவுள்ள தீவிர புயல் – டிச.4 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!

0
தமிழகத்தை தாக்கவுள்ள தீவிர புயல் - டிச.4 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!
தமிழகத்தை தாக்கவுள்ள தீவிர புயல் - டிச.4 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!
தமிழகத்தை தாக்கவுள்ள தீவிர புயல் – டிச.4 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!

தீவிர புயல் காரணமாக தமிழகத்தில் திங்கட்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

பள்ளி விடுமுறை:

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நாளை தீவிர புயலாக வலுப்பெற இருக்கிறது. இதன் பின்னர், டிசம்பர் 4ஆம் தேதி திங்கட்கிழமை தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டியுள்ள வடதமிழக கடலோர பகுதிகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தவுள்ளது. அதிலும், குறிப்பாக நாளை முதல் திங்கட்கிழமை வரையிலும் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால் கடலோர பகுதி மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.

2024 IPL க்கான ஏலம் டிச.19 துவக்கம் – 1166 வீரர்கள் பதிவு!! 

மேலும், மீனவர்களும் கடலில் இருந்து உடனடியாக கரைக்கு திரும்புமாறு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. இதனை தவிர பிற மாவட்டங்களில் மிக அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. இந்நிலையில், புயல் எச்சரிக்கை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்திற்கு டிசம்பர் 4 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!