2024 IPL க்கான ஏலம் டிச.19 துவக்கம் – 1166 வீரர்கள் பதிவு!!
2024 ஆம் ஆண்டிற்கான IPL ஏலம் டிச.19 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் மொத்தமாக ஏலத்திற்கு 1166 வீரர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
IPL ஏலம்:
ஐபிஎல் 17-வது சீசனுக்கான ஏலம் டிசம்பர் 19 ஆம் தேதி துபாயில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், IPL தொடரில் பங்குபெறும் 10 அணிகளும் தங்களது அணியில் தக்கவைத்துள்ள மற்றும் விடுவித்துள்ள வீரர்களின் பட்டியலை கடந்த நவம்பர் 26 ஆம் தேதி வெளியிட்டனர். இந்நிலையில், துபாயில் நடைபெறும் ஏலத்தில் திறமையான வீரர்களை ஏலத்தில் எடுக்க ஒவ்வொரு அணியும் திட்டமிட்டு வருகிறது.
இந்நிலையில், டிசம்பர் 19 ஆம் தேதி நடைபெறும் ஏலத்திற்கு மொத்தமாக 1166 பேர் அடிப்படை விலையாக ரூ.2 கோடிக்கு விண்ணப்பித்துள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, 830 இந்திய வீரர்கள் மற்றும் 336 வெளிநாட்டு வீரர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதே போல, IPL ஏலத்திற்கு விண்ணப்பித்தவர்களில் 909 வீரர்கள் எந்தவித சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்க்காதவர்களாகும்.