அதிகபட்ச வெப்பநிலை உயர்வை கருத்தில் கொண்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு உத்தரவிடப்பட்டுள்ளது.
வெப்பநிலை எச்சரிக்கை:
கடந்த பருவமழை காலத்தில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு மழை பொழிவு பதிவாகியது. அதே போல் தற்போது கோடை காலத்தில் இதுவரை இல்லாத உச்ச கட்ட வெப்பநிலை நிலவி வருகிறது. கோடை காலத்தின்ஆரம்ப பகுதியிலேயே வெப்பநிலை பல்வேறு பகுதிகளிலும் நாட்டில் 100 சதவீதத்தை தாண்டி பதிவாகி வந்தது. இந்நிலையில் ஏப்ரல் மாதத்தின் இறுதி பகுதியை எட்டி உள்ள நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெப்பநிலை தாங்க முடியாத அளவிற்கு உயர்ந்து வருகிறது.
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் வேலை – ரூ.35,000/- மாத ஊதியம்!
இந்நிலையில், வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பை கருத்தில் கொண்டு ஒடிசா மாநிலத்தில் பள்ளிகளுக்கு மூன்று நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெப்ப அலை காரணமாக பல இடங்களில் 45 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்ப நிலையில் இருந்து தற்காத்துக் கொள்ளும் விதமாக மக்கள் முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.