தென் தமிழக பகுதிகளில் நேற்று ஒரு சில இடங்களில் மழை பொழிவு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்து வரும் நாட்களுக்கான வானிலை நிலவரம் குறித்த தகவல்களை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை அறிக்கை:
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 41.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழக பகுதிகளில் மேல் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இதை தவிர மற்ற மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
பள்ளிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை – அதிகபட்ச வெப்பநிலை எச்சரிக்கை
ஏப்ரல் 19 மற்றும் 20 ம் தேதிகளில் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 18 மற்றும் 19 ஆகிய இரண்டு தினங்கள் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக் கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஏப்ரல் 19 மற்றும் 20ம் தேதி வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகம் வரை வீசக் கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.