மேற்கு வங்காள பள்ளிக் கல்வித் துறையானது வெப்ப சலனம் காரணமாக ஏப்ரல் 22ம் தேதி முதல் அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்குவதாக அறிவித்துள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை:
மேற்கு வங்காளத்தின் வடக்கு பகுதிகளில் உள்ள பள்ளிகள் லோக்சபா தேர்தலை முன்னிட்டு பாதுகாப்புப் படையினரின் முகாம்களாகவும், சாவடிகளாகவும் தற்போது மாற்றப்பட்டுள்ளது. எனவே பள்ளிகளுக்கான கோடை விடுமுறையானது மே 6ம் தேதி முதல் வழங்கப்பட திட்டமிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் மேற்கு வங்காள பள்ளிக் கல்வித் துறையானது புதிய சுற்றறிக்கை ஒன்றை இன்று (ஏப்ரல் 18) வெளியிட்டுள்ளது. இதில் வெப்ப சலனம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருப்பதால் மாணவர்களின் நலன் கருதி ஏப்ரல் 22ம் தேதி முதல் கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
நாளை மாலை 6 மணி வரை அனைவரும் வாக்களிக்கலாம் – தேர்தல் அதிகாரி தகவல்!
இந்த விடுமுறை காலத்தில் பள்ளிகளின் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கும் விடுமுறை வழங்கப்படும். ஆனால் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள நபர்கள் தேர்தல் அதிகாரிகளின் வழிகாட்டுதலுக்கு உட்பட்டு செயல்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விடுமுறையானது டார்ஜிலிங் மற்றும் கலிம்போங் மாவட்ட மலைப்பகுதி பள்ளிகள் தவிர மேற்கு வங்காளத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தனியார் பள்ளிகளும் தங்களது கோடை விடுமுறையை ஒத்திவைக்குமாறு கல்வி அமைச்சர் பிரத்யா பாசு கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.