நாளை மாலை 6 மணி வரை அனைவரும் வாக்களிக்கலாம் – தேர்தல் அதிகாரி தகவல்!

0
நாளை மாலை 6 மணி வரை அனைவரும் வாக்களிக்கலாம் - தேர்தல் அதிகாரி தகவல்!

தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள தமிழக தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய அறிவிப்பு போன்ற தற்போது வெளியிட்டுள்ளார்.

தேர்தல் அதிகாரி தகவல்:

நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு முதல் கட்டமாக தபால் வாக்கு பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. அதனை தொடர்ந்து தேர்தல் பணியில் ஈடுபட ஆந்திரா, கேரளா,தெலுங்கானா உள்ள மாநிலங்களில் இருந்து 10,000 மேற்பட்ட போலீசர்கள் தமிழகத்திற்கு வந்தடைந்துள்ளனர். தமிழகத்தில் 39 தொகுதிகள் உட்பட 21 மாநிலங்களில் 102 மக்களவைத் தொகுதிகளில் நாளை முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது . மொத்தம் 950 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில் நாளை காலை 7 மணி முதல் மாலை 6:00 மணி வரை வாக்கு செலுத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தமிழகம் முழுவதும் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் வேலை – ரூ.35,000/- மாத ஊதியம்!

பதற்றமான வாக்குச்சாவடிகளில் அதிகமான போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 68,321 வாக்குச்சாவடிகளிலும் 6 மணிக்கு வரிசைகள் நிற்போர் அனைவரும் வாக்களிக்கலாம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார். அதாவது கடைசி வாக்காளர் வாக்களிக்கும் வரை முழுமையாக வாய்ப்பு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!