பள்ளி மாணவிகளுக்கு ஹெல்த் கிட் வழங்கல் – தெலுங்கானா அரசின் திட்டம்!
தெலுங்கானா மாநிலத்தில் அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு தேவையான நலத்திட்ட வசதிகள் அரசு சார்பில் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகிறது. இதுகுறித்து முக்கிய உத்தரவு தற்போது வெளியாகியுள்ளது.
ஹெல்த் கிட்:
இளம் வயதில் மாணவ, மாணவிகளுக்கு கல்வியை அளிப்பதை அரசுகள் நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இதனால், அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து வருகிறது. இந்நிலையில், பருவ வயதில் பயிலும் மாணவிகளுக்கு ஹெல்த் கிட் வழங்குவது குறித்து தெலுங்கானா அரசு முன்னதாக அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில், தற்போது அதற்கான உத்தரவுகளை வெளியிட்டுள்ளது.
உங்களுக்கு மெட்ராஸ் ஐ பாதிப்பா? கட்டாய விடுப்பு எடுக்கலாம்.. கல்வி அலுவலர் அறிவிப்பு!!
Exams Daily Mobile App Download
அதாவது, தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 8 முதல் 2ம் வகுப்பு பயிலும் மாணவிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவிகளுக்கு ஹெல்த் கிட் வழங்குவதற்கான திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த கிட்டில் ஜிப்பர் பேக், சானிட்டரி நாப்கின்கள் மற்றும் தண்ணீர் பாட்டில் இருக்கும், இதற்காக அரசு ரூ.69.52 கோடி ரூபாயை NHM நிதியில் இருந்து ஒதுக்கியுள்ளதாகவும், இந்த பணிகள் சுகாதாரம் மற்றும் குடும்ப நல ஆணையர் மற்றும் பணி இயக்குனர் மூலம் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.