தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கான ஹாப்பி நியூஸ் – இனி வீடு தேடி வரும் சேவை!

0
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கான ஹாப்பி நியூஸ் - இனி வீடு தேடி வரும் சேவை!
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கான ஹாப்பி நியூஸ் - இனி வீடு தேடி வரும் சேவை!
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கான ஹாப்பி நியூஸ் – இனி வீடு தேடி வரும் சேவை!

தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிக்கு வந்தது முதல் ரேஷன் கடைகள் மூலம் மக்கள் பல்வேறு சலுகைகளை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையிலான செய்தியை அரசு தெரிவித்துள்ளது.

ரேஷன் கார்டு:

தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஏழை எளிய மக்கள் மாதந்தோறும் குறைந்த விலையில் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் திமுக அரசு ஆட்சிக்கு வந்தது முதல் ரேஷன் கடைகளில் மக்களுக்கு உதவும் வகையில் கொரோனா நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இலவசமாக மளிகை பொருட்களும் வழங்கப்பட்டது. மேலும் தேர்தலின் போது ரேஷன் கடைகள் மூலம் கார்டு வைத்துள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது.

Exams Daily Mobile App Download

எனவே அரசின் இந்த அறிவிப்பினால் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் மக்கள் கொரோனா ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க தாலுகா அலுவலகங்களுக்கு படையெடுத்தனர். மேலும், இந்த நேரத்தில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் நோக்கில் ஆன்லைன் மூலமாக புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் முறை கொண்டுவரப்பட்டது. இதனால் எப்போதும் ரேஷன் கார்டு வேண்டி நீங்கள் விண்ணப்பித்த விண்ணப்பம் அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே ரேஷன் கார்டு கிடைக்கும். இவர்கள் தாலுகா அலுவலகத்திற்கு நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம்.

அரசு பணியாளர்களின் கவனத்திற்கு – ஜூலை 1 முதல் புதிய திட்டம் அறிமுகம்!

இந்த நிலையில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் பயனாளிகளின் வீடுகளுக்கு ரேஷன் கார்டை அஞ்சலில் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசிடம் உணவு வழங்கல் துறை அனுமதி கோரியிருந்தது. அதனை தொடர்ந்து, இதற்கு அரசு தற்போது ஒப்புதல் அளித்த நிலையில் இனி ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தால் கார்டு வாடிக்கையாளரின் வீட்டுக்கே அனுப்பிவைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வசதியை பெற ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்ப படிவத்தில் வீட்டுக்கு டெலிவரி செய்வதற்கான ஆப்சனை தேர்வு செய்வது அவசியம். அப்போது தான் உங்கள் புதிய ரேஷன் கார்டு போஸ்ட் மேன் மூலம் வீட்டிற்கே நேரடியாக டெலிவரி செய்யப்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!