குஜராத் மாநிலத்தில் லோக்சபா தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு மே 7 ஆம் தேதி நடைபெற இருப்பதால் விடுமுறை விடப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை
லோக்சபா தேர்தல் முதல் கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கியது. அதன் பின் இரண்டாம் கட்டம் ஏப்ரல் 26 ஆம் தேதி பல்வேறு மாநிலங்களில் நடைபெற்றது. இந்நிலையில் மூன்றாம் கட்ட தேர்தல் மே 7 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் பல மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. தினத்தில் குஜராத் மாநிலத்தில் உள்ள 94 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
TNPSC 2024 பொதுத்தமிழ் எப்படி படிக்கலாம்!!என்னென்ன படிக்கலாம் !!! இந்த வீடியோ பாருங்க !!
அதனால் பாதுகாப்பை உறுதி செய்யவும், அனைவரும் சுமூகமாக வாக்களிக்க வேண்டும் என்பதாலும் அந்த மாநிலம் முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள் மே 7 ஆம் தேதி மூடப்படும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மேலும் மக்களவை தேர்தல் ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.