கவுரவ விரிவுரையாளர்கள் பணி நியமன வழக்கு தள்ளுபடி – உயர் நீதிமன்றம் உத்தரவு!!
பணியிடங்கள்:
தமிழக அரசு மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2,331 உதவி பேராசிரியர் பணியிடங்கள் இருந்தது. இந்த பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதி நேரடி நியமனம் மூலம் நிரப்ப அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. உதவி பேராசிரியர் பணிக்காக கடந்த ஐந்து ஆண்டுகளாக கவுரவ விரிவுரையாளர்களாக பணிபுரியும் ஆசிரியர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்க கல்லூரி இயக்குனர் உத்தரவிட்டார்.
தமிழகத்தில் இயல்பை விட அதிக வெப்பநிலை நிலவும் – இன்றைய வானிலை அறிக்கை!!
எதிர்ப்பு:
டிஆர்பி இன் இந்த அறிவிப்பை எதிர்த்து தனியார் கல்லூரி உதவி பேராசிரியர் ஒருவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதன்படி, அரசு கல்லூரி கவுரவ பேராசிரியர்கள் அந்த பணிக்கு நியமிக்கப்பட்டால் தகுதியான மற்ற ஆசிரியர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்காமல் பாதிக்கப்படுவர் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
வழக்கு விசாரணை:
இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், “டிஆர்பி வெளியிட்டுள்ள அறிவிப்பிற்கு, கவுரவ விரிவுரையாளர்களை வரன்முறைப்படுத்துவதற்கும் சம்பந்தமில்லை. உதவி பேராசிரியர் பணிக்கு புதிதாக நியமனம் மேற்கொள்ளப்படும். மேலும், அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களை வரன்முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார். இத்தனை ஏற்ற நீதிபதி இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்