தமிழகத்தில் இயல்பை விட அதிக வெப்பநிலை நிலவும் – இன்றைய வானிலை அறிக்கை!!
தமிழகத்தில் இன்றும், நாளையும் பொதுவாக வறண்ட வானிலையும், வரும் நாட்களில் சாதாரண நிலையை விட வெப்பநிலை அதிகரிக்கவும் வாய்ப்புகள் உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வானிலை அறிக்கை:
30.03.2021 முதல் 03.04.2021 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக தெளிவாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
பள்ளி, கல்லூரிகளில் நேரடி முறை தேர்வுகள் – மாநில அரசு உத்தரவு!!
அதிகபட்ச வெப்பநிலை முன்னறிவிப்பு:
02.04.2021, 03.04.2021: தரைக்காற்று வடமேற்கு திசையிலிருந்து தமிழக பகுதி நோக்கி வீச சாத்தியக்கூறுகள் உள்ளதால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பைவிட இரண்டிலிருந்து மூன்று டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் மழை அளவு (சென்டிமீட்டரில்):
பேச்சுப்பாறை (கன்னியாகுமரி) 3, ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்), சித்தார் (கன்னியாகுமரி) தலா 2, சங்கரன்கோயில் (தென்காசி), குழித்துறை (கன்னியாகுமரி), தென்காசி , ராஜபாளையம் (விருதுநகர், சிவலோகம் (கன்னியாகுமரி) தலா 1 செமீ.
மீனவர்களுக்கான எச்சரிக்கை :
தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் தற்போது நிலவும் வளிமண்டல சுழற்சி (4.5 கிலோமீட்டர்) அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், அதனை தொடர்ந்து 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றாழ்த்த பகுதியாக உருவாக வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக 30.03.2021, 31.03.2021 : தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் .
01:04.2021 : அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
அரசு பள்ளி ஆசிரியருக்கு கொரோனா தொற்று – பள்ளிக்கு விடுமுறை!!
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்தியரேகை பகுதிகளில் நிலவிய வளிமண்டல சுழற்சியானது நேற்று இரவு முதல் காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே இடத்தில நீடிக்கின்றது.
இதன் காரணமாக 30.03.2021 : தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.
02.04.2021, 03.04.2021: குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் மாலத்தீவு பகுதிகளில் பலத்த காற்று தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இருபகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்