தமிழகத்தில் கல்லூரி பேராசிரியர்களுக்கு குட் நியூஸ் சொன்ன அரசு – உயர்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட தகவல்!
தமிழகத்தில் உள்ள கல்வி சார்ந்த நடவடிக்கைகள் அனைத்தையும் முறைப்படுத்த அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், தற்போது தமிழக உயர்கல்விதுறை அமைச்சர் பொன்முடி அவர்கள் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பேராசிரியர்கள் கோரிக்கை:
தமிழகத்தில் தற்போது நடப்பு கல்வி ஆண்டில் தான் வழக்கம் போல் ஆரம்பத்தில் இருந்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றது. இதனால் கல்வித்துறை அதிக கண்காணிப்புகளுடன் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிப்பதற்காக அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களையும் அறிமுகம் செய்து வருகிறது. இதனால் தற்போது அரசு பள்ளிகளை நோக்கி அதிக மாணவர்கள் படை எடுத்து வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த 2012ம் ஆண்டு நியமிக்கப்பட்ட 995 துணை பேராசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளனர். இவர்கள் பல வருடங்களாக தொடர்ந்து இதற்கான கோரிக்கையை வைத்து வந்தனர். வழக்கமாக 2 ஆண்டுகள் அரசு கல்லூரிகளில் பணி புரிந்தவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். ஆனால், 9 வருடங்களாக பணியாற்றியும் இவர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கப்படாமல் இருந்தது.
வங்கி பயனர்களே உஷார்! அக்டோபர் மாதத்தில் 21 நாட்கள் Bank விடுமுறை – முழு லிஸ்ட் உள்ளே!
Exams Daily Mobile App Download
இதற்காக பலமுறை இந்த பேராசிரியர்கள் கோரிக்கை வைத்தும், போராட்டம் நடத்தியும் வந்தனர். இது குறித்து தற்போது தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அதன்படி, அரசு கல்லூரிகளில் பணிபுரியும் 955 பேராசிரியர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு பணிவரன்முறை செய்யப்பட்டுள்ளது என்றும், மேலும், பல்கலைக்கழகங்களின் 41 உறுப்புக் கல்லூரிகளை ரூ.152 கோடி செலவில் அரசு ஏற்று நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்