மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு – கணக்கீடு விவரம் இதோ!
இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக் குழுவின் பரிந்துரையின் படி அகவிலைப்படி தற்போது 4% உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது அகவிலைப்படி கணக்கீடு குறித்து இப்பதிவில் காண்போம்.
அகவிலைப்படி:
இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிகரித்து வரும் விலைவாசிக்கு ஏற்ப ஒரு ஆண்டுக்கு 2 முறை அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டு அகவிலைப்படி உயர்வு வேண்டி கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்று கடந்த வாரம் 7 – வது ஊதிய குழுவின் பரிந்துரையின் படி ஊழியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக அகவிலைப்படியை 4% மத்திய அரசு உயர்த்தியது.
8000க்கு மேல் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய போகும் சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனம் – வெளியான அதிர்ச்சி தகவல்!
இதனையடுத்து அகவிலைப்படி 38 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக உயர்ந்துள்ளது. அனைத்து மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியத்தாரர்களுக்கும் இந்த அகவிலைப்படி பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 47. 58 லட்சம் அரசு ஊழியர்களும், 69.76 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள்.
அகவிலைப்படி கணக்கீடு:
- அகவிலைப்படி சதவீதம் = (அனைத்திந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் சராசரி (அடிப்படை ஆண்டு 2001=100)
- கடந்த 12 மாதங்களில் -115.76)/115.76) x100 என்ற அடிப்படையில் கணக்கிடபடும்.
Exams Daily Mobile App Download