தமிழகத்தில் மீண்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 அதிகரிப்பு – நகை பிரியர்கள் அதிர்ச்சி!

0
தமிழகத்தில் மீண்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 அதிகரிப்பு – நகை பிரியர்கள் அதிர்ச்சி!

சென்னையில் அக்ஷய திருதியைக்கு பிறகும் கூட ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று ரூ.120 அதிகரித்த நிலையில் தற்போது மீண்டும் ரூ.96 அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தங்கத்தின் விலை

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுவதால் தங்கத்தின் விலை உயர்வதும் குறைவதுமாய் இருந்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் வழக்கமாகவே அக்ஷய திருதியின் போது தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து அக்ஷய திருதியை முடிவடைந்ததும் விலை குறைய ஆரம்பிக்கும். ஆனால், இந்த வருடம் அக்ஷய திருதியை முடிந்த பிறகும் கூட தொடர்ந்து தங்கத்தின் விலை அதிகரித்தபடியே இருக்கிறது.

அதாவது, சென்னையில் நேற்றைய விலைப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5630 ரூபாய்க்கும், ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.45040க்கும் விற்பனை செய்யப்பட்டது. மேலும், நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 12 ரூபாய் அதிகரித்து 5642 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்க நகையின் விலை 96 ரூபாய் அதிகரித்து தற்போது ரூ.45136க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் அகவிலைப்படி உயர்வு.. காத்திருப்பில் ஊழியர்கள்!

மேலும் வெள்ளியின் விலையை நேற்றைய விலையுடன் ஒப்பிடும்பொழுது இன்று 50 காசுகள் குறைந்துள்ளது. அதாவது நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.80.70 க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ.80.20க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!