வங்கிகளில் நகைகளை அடகு வைக்க இனி புது ரூல்ஸ்…!! RBI ன் புதிய விதிகளால் மக்கள் அதிர்ச்சி…!!
மக்கள் தங்களின் அவசர கால நிதி தேவையை பூர்த்தி செய்ய தங்க நகைகளை அடகு வைக்கிறார்கள். அப்படி, வங்கிகளில் நகைகளை அடகு வைக்கும் போது ஒரு மணி நேரத்திற்குள் பணம் கிடைத்துவிடுகிறது. ஆனால், தற்போது ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய விதிகளால் தங்க நகைகள் அடகு வைப்பது கடினமான ஒன்றாக மாறியுள்ளது. அதாவது, தங்க நகை வாங்கியதற்கான ரசீது இருந்தால் மட்டுமே அவற்றை வங்கிகளில் அடகு வைக்க முடியும் என்று தெரிவித்துள்ளது.
உங்ககிட்ட ‘PAN’ கார்ட் இல்லையா..? அவசரமா வேணுமா.. அப்போ இத பண்ணுங்க..
அதிலும், குறிப்பாக ரசீதில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே நகைகளை அடகு வைக்கவும், விற்கவும் முடியும் என்று தெரிவித்துள்ளது. இதனால், இந்திய மக்கள் பலரும் அச்சத்தில் உள்ளனர். மேலும், இந்த RBI ன் புதிய விதிமுறைகள் வருகின்ற மார்ச் 31 ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த புதிய விதிமுறைகள் அமலுக்கு வரும் முன்னரே சில நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் நகைக்கான ரசீதுகளை கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


























