உடனடி கடன் தேவையா..?? ஆதார் கார்டு மட்டும் போதும்.. ரூ. 2 லட்சம் வரை கடன் வாங்கலாம்..!!
இந்தியா குடியுரிமையை ஆவணங்களில் மிக முக்கியமானதாக ஆதார் கார்டு உள்ளது. மேலும், சிம் கார்டுகள் வாங்குவது முதல் வங்கி கணக்கு தொடங்குவது வரை பலவற்றிற்கும் ஆதார் கட்டாயம் தேவை. இதை தொடர்ந்து, அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு ஆதார் ஆவணம் மிகவும் அவசியம். இந்நிலையில் ஆதார் கார்டை பயன்படுத்தி கடன் வாங்குவது பற்றிய பற்றி இப்பதிவில் விரிவாக பார்க்கலாம்.
இனி சாலை விபத்தில் காயமடைந்தால் இலவச சிகிச்சை.. மத்திய அரசு முக்கிய அறிவிப்பு..!!
அதாவது, இன்றைய காலக்கட்டத்தில் அவசர தேவைகளுக்காக பலரும் கடன் பெறுகின்றனர். இதற்காக மக்கள் முதலில் வங்கியை அணுகுகின்றனர். மேலும், வங்கியில் கடன் பெற பல நடைமுறை சிக்கல்கள் உள்ளது. அவற்றை ஆதாரை வைத்து சுலபமாக நிர்வகிக்கலாம். மேலும், வழக்கமாக கடன் பெறும் முறையில் இருந்து ஆதார் அட்டையை பயன்படுத்தி கடன் பெறுவது முற்றிலும் மாறுபட்டது. இதில் “வருமான வரி, முகவரி மற்றும் அடையாளச் சான்று போன்ற அடிப்படை ஆவணங்கள் எதுவுமின்றி ரூ. 2 லட்சம் வரை கடன் பெறலாம்”. இதற்கு “21 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்றும், விண்ணப்பத்தாரர் குறைந்தபட்சமாக ரூ. 15,000 முதல் ரூ. 25,000 வரை மாத வருமானம் பெறுபவராக இருக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதியாக “இந்த கடனுக்கு விண்ணப்பிக்கும் போது ஆதார் அட்டை செயல்பாட்டில் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது”.


























