இனி சாலை விபத்தில் காயமடைந்தால் இலவச சிகிச்சை.. மத்திய அரசு முக்கிய அறிவிப்பு..!!
சர்வதேச அளவில் அதிக சாலை விபத்து நடக்கும் நாடுகளில் இந்தியா முதன்மையான நாடாக உள்ளது. இதை குறைக்கவும், விபத்தில் சிக்கியவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் முறையாக கிடைப்பதை உறுதி செய்யவும் மத்திய அரசு பல்வேறு ஆலோசனை மேற்கொண்டு வந்தது. இது குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசும்போது, விபத்து குறித்து 24 மணி நேரத்திற்குள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டால் சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்கும் என தெரிவித்திருந்தார்.
அதன்படி, இனி சாலை விபத்தில் தனிநபர் காயமடைந்தால் இலவச சிகிச்சை வழங்கப்படும் என ஒன்றிய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும், விபத்து நடந்த முதல் 7 நாட்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் ரூ.1.5 லட்சம் வரை இலவசமாக சிகிச்சை தரப்படும் எனவும், இத்திட்டத்தை கண்காணிக்க 17 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை அமைக்க ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவே விபத்து தமிழ்நாட்டில் நிகழ்ந்திருந்தால் “நம்மை காக்கும் 48” என்ற திட்டத்தின் மூலம் இலவச சிகிச்சை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


























