அமைப்புசாரா துறையில் பணிபுரிபவரா நீங்கள்..?? அப்போ இந்த கார்டு பற்றி கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!
இந்தியாவில் அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு நிதி பாதுகாப்பு மற்றும் ஓய்வூதிய சலுகைகளை வழங்குவதற்காக E-Shram திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. மேலும், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு விபத்து காப்பீடு, ஓய்வூதியத் திட்டங்கள் மற்றும் பிற சமூக நலத் திட்டங்களின் நன்மைகளை விரிவுபடுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம். இத்திட்டத்தின் கீழ், பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.3,000 பென்ஷன் வழங்கப்படுகிறது.
உடனடி கடன் தேவையா..?? ஆதார் கார்டு மட்டும் போதும்.. ரூ. 2 லட்சம் வரை கடன் வாங்கலாம்..!!
இதில் விண்ணப்பிக்க “16 முதல் 59 வயது வரை உள்ள அனைத்து அமைப்புசாரா துறை தொழிலாளர்கள் பயனடையலாம். இந்தத் திட்டம் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அல்லது தொழிலாளர் அரசு காப்பீட்டு திட்டத்தின் (ESIC) கீழ் சாரதவர்களை இலக்காகக் கொண்டது. மேலும், விண்ணப்பதாரர்கள் இந்த E-Shram கார்டை https://eshram.gov.in மூலம் எளிய வழிமுறைகளை பின்பற்றி விண்ணப்பிக்கலாம். இந்த E-Shram கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரூ. 2 லட்சம் விபத்து காப்பீடு தொகை, வீட்டுவசதி, உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பராமரிப்புக்கான நலத்திட்டங்கள் பெறலாம். மேலும், எதிர்கால வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்களில் முன்னுரிமை வழங்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


























