மீண்டும் முழு ஊரடங்கு அமலாகுமா? அரசு பரபரப்பு விளக்கம்!

0
மீண்டும் முழு ஊரடங்கு அமலாகுமா? அரசு பரபரப்பு விளக்கம்!
மீண்டும் முழு ஊரடங்கு அமலாகுமா? அரசு பரபரப்பு விளக்கம்!
மீண்டும் முழு ஊரடங்கு அமலாகுமா? அரசு பரபரப்பு விளக்கம்!

உலக நாடுகளை அதிக அச்சத்தில் ஆழ்த்தி வருவது கொரோனா தொற்று. இந்த நிலையில் ஆஸ்திரியாவில் கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருவதால், தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அளித்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு அதிகரித்தால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மீண்டும் தீவிரமடையும் என எச்சரித்துள்ளது.

முழு ஊரடங்கு 

கொரோனா என்ற பெருந்தொற்று சீனாவின் வுகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் முதன் முதலில் பரவியது. இந்த தொற்று மற்ற நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தி அதிக பேரழிவை ஏற்படுத்தி வந்தது. இந்த பாதிப்பை கட்டுப்படுத்தும் விதமாக தொற்று பாதித்த நாடுகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அனைத்து தொழில்துறைகளும் முடக்கப்பட்டது. மேலும் கொரோனா தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு அனைத்து நாடுகளிலும் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

தமிழக ரேஷன் கடைகளில் 3,803 காலிப்பணியிடங்கள் – வேலைவாய்ப்பு முகாம் மூலம் நிரப்ப நடவடிக்கை!

இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் மீண்டும் உருமாறிய ஓமைக்ரான் என்ற புதிய வகை வைரஸ் பரவ தொடங்கின. தற்போது ஓமைக்ரான் வைரஸ் உலக நாடு முழுவதும் பரவியுள்ளது. இந்த வகையில் மேற்கு ஐரோப்பியா நாடான ஆஸ்திரியாவில், கொரோனா பரவலை தொடர்ந்து ஓமைக்ரான் வைரஸ் பரவல் காரணமாக கடந்த நவம்பர் மாதம் 2 வாரங்களாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. தற்போது கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதால் கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு மட்டும் முழு ஊரடங்கு நடைமுறையில் இருந்தது.

SBI வங்கியில் MBA பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – பிப்.25 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு!

இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு, கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கும் ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டது. மேலும், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை ஆஸ்திரியா அரசு அளித்துள்ளது. அந்த வகையில் உணவகங்கள் மற்றும் அருங்காட்சியகங்களுக்குள் செல்வதற்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து எப்.எப்.பி.2 முகக்கவசம் அணிந்து கொண்டு பொது இடங்களுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரித்து வந்தால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் ஆஸ்திரியா அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!