மக்களே.., இனி மின்கட்டணம் செலுத்த தேவையில்லை…!! மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் தகவல்..!!
அதாவது, மக்களுக்கு இலவச மின்சாரத்தை வழங்கவும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளத்தை அதிகம் பயன்படுத்துவதையும் நோக்கமாக கொண்டு, “பிரதமரின் சூரியவீடு இலவச மின்சார திட்டம்” தொடங்கப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீட்டின் மேலும் சோலார் பேனல்கள் அமைக்க மத்திய அரசால் மானியம் வழங்கப்படுகிறது. அதாவது, உதாரணமாக, 2 கிலோ வாட் உற்பத்தி திறன் கொண்ட சோலார் பேனல்களை அமைத்தால் அதன் விலையில் 60 % மானியமாக வழங்கப்படுகிறது. மேலும், இத்திட்டத்தில் இணைபவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக 300 யூனிட் மின்சாரம் அரசால் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், சோலார் பேனல்களை அமைப்பதன் மூலம் தேவைக்கு போக கிடைக்கும் மிச்ச மின்சாரத்தை வெளியே விற்பதன் மூலமும் வருமானம் ஈட்டலாம். மேலும், இத்திட்டத்தின் மூலம் பயனடைய https://pmsuryaghar.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும். அத்துடன், இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க சொந்த வீட்டுடன், இதுவரை எந்தவித சூரியமின்சார திட்டத்திலும் பயனடையாதவர்களாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
























