மத்திய அரசில் 10 வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 81,100 சம்பளத்தில் ஒரு புதிய வேலைவாய்ப்பு…விண்ணப்பிக்கும் வழிமுறைகள் இதோ

0
மத்திய அரசில் 10 வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 81,100 சம்பளத்தில் ஒரு புதிய வேலைவாய்ப்பு...விண்ணப்பிக்கும் வழிமுறைகள் இதோ
மத்திய அரசில் 10 வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 81,100 சம்பளத்தில் ஒரு புதிய வேலைவாய்ப்பு...விண்ணப்பிக்கும் வழிமுறைகள் இதோ

மத்திய அரசில் 10 வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 81,100 சம்பளத்தில் ஒரு புதிய வேலைவாய்ப்பு…விண்ணப்பிக்கும் வழிமுறைகள் இதோ

காரைக்குடி மாவட்டத்தில் உள்ள மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (CECRI)  ஜூனியர் ஸ்டெனோகிராஃபர், ஜூனியர் செயலக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு  காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. இதற்கு, தகுதியான விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும், இதற்கான முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். எனவே, இதை முழுமையாக படித்து தெரிந்து கொண்டு இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

CECRI காலிப்பணியிடங்கள்:

CECRI வெளியிட்ட அறிவிப்பில் 10 காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூனியர் ஸ்டெனோகிராஃபர் – 2 பதவிகள்

ஜூனியர் செயலக உதவியாளர் (பொது) – 4 பதவிகள்

இளநிலை செயலக உதவியாளர் – 2 பதவிகள்

ஜூனியர் செயலக உதவியாளர் (கடைகள் & கொள்முதல்) – 2 பதவிகள்

CECRI கல்வித்தகுதி:

பணியின் அடிப்படையில் விண்ணப்பத்தாரர்களின் கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஜூனியர் ஸ்டெனோகிராஃபர்:
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று,   DOPT ஆல் பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளின் படி ஸ்டெனோகிராஃபரில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஜூனியர் செயலக உதவியாளர் (பொது):
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி, பெற்று Computer speed type மற்றும்  DOPT ஆல் பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளின் படி கணினி பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும்.

இளநிலை செயலக உதவியாளர்:
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி,பெற்று     Computer speed type மற்றும்  DOPT ஆல் பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளின் படி கணினி பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும்.

ஜூனியர் செயலக உதவியாளர் (கடைகள் & கொள்முதல்):
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி,  பெற்று  Computer speed type மற்றும் DOPT ஆல் பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளின் படி கணினி பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும்.

CECRI வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 27 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலைவாய்ப்பு…மாதம் ரூ. 1,40,000 வரை சம்பளம்…விண்ணப்பிக்கும் முறை இதோ

CECRI ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது.

ஜூனியர் ஸ்டெனோகிராஃபர்:
மாதத்திற்கு ரூ. 25,500 முதல் ரூ. 81,100 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூனியர் செயலக உதவியாளர் (பொது):
மாதத்திற்கு ரூ. 19,900 முதல் ரூ. 63,200 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளநிலை செயலக உதவியாளர்:
மாதத்திற்கு ரூ. 19,900 முதல் ரூ. 63,200 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூனியர் செயலக உதவியாளர் (கடைகள் & கொள்முதல்):
மாதத்திற்கு ரூ. 19,900 முதல் ரூ. 63,200 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CECRI தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு /சுருக்கெழுத்து தேர்வு / கணினி தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

CECRI விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://jsarecruit.cecri.res.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் இன்று (18.03.2025) மாலை 05.30 மணியுடன் முடிவடைவதால், தகுதியான விண்ணப்பத்தாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!