அரசு பள்ளி மாணவர்களுக்கு ரூ.200 கோடி செலவில் இலவச நோட் புத்தகங்கள் – அமைச்சர் அறிவிப்பு!
அரசு பள்ளி மாணவர்களுக்கு ரூபாய் 200 கோடி செலவில் இலவச நோட் புத்தகங்கள், சீருடைகள் வழங்க இருப்பதாக தெலுங்கானா மாநிலத்தின் கல்வி அமைச்சர் பி சபிதா இந்திரா ரெட்டி தற்போது அறிவித்துள்ளார்.
இலவச நோட் புத்தகம்
தெலுங்கானா மாநிலத்தில் கோடை விடுமுறை முடிந்து 2023 -24 ஆம் கல்வி ஆண்டிற்கான வகுப்புகள் ஜூன் 12ஆம் தேதி தொடங்கப்பட இருக்கிறது. இந்நிலையில் இந்த ஆண்டு கல்வித்துறையின் வளர்ச்சியை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காக தலைமைச் செயலகத்தில் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
மத்திய மின்சார துறையில் Apprentices வேலைவாய்ப்பு – ரூ.9000/- உதவித்தொகை!
இதில், மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள் வழங்குவது குறித்து முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார். அதாவது தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் பயிலும் 24 லட்சம் மாணவர்களுக்கு நோட் புத்தகங்கள், பாட புத்தகங்கள் மற்றும் பள்ளி சீருடைகள் இலவசமாக விநியோகம் செய்யப்பட இருப்பதாக தெலுங்கானா கல்வி அமைச்சர் பி சபிதா இந்திரா ரெட்டி தற்போது அறிவித்துள்ளார்.
மேலும், இதற்காக 200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தெலுங்கானா மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் இலவசமாக நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டு வந்து நிலையில் இந்த ஆண்டு கூடுதலாக இரு மொழி பாட புத்தகங்கள் மற்றும் இரண்டு ஜோடி பள்ளி சீருடைகள் வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக, ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி நோட்டுகள் வழங்கப்பட இருக்கும் நிலையில் உயர்நிலைப்பள்ளி மாணவர்களின் தேவையறிந்து அதற்கான நோட் புத்தகங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களின் முன்னிலையில் இலவசமாக மாணவர்களுக்கு வழங்கப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download