தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ் – இலவச மடிக்கணினி திட்டம் .. அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டு விட்டதா? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.
லேப்டாப்:
இன்றைய தொழில்நுட்ப உலகில் பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி அவசிய ஒன்றாகி விட்டது. இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவு வளர்க்கும் நோக்கிலும் அவர்களின் உயர் கல்விக்கு உதவும் வகையிலும் இலவச மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக ஏராளமான மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர்.
அரசு ஊழியர்களுக்கு கூடுதல் நேர கொடுப்பனவு பெறுவது குறித்த வழக்கு – நீதிமன்றம் புதிய உத்தரவு!
கடந்த ஆண்டில் நிலவிய கொரோனா கால கட்டத்தில் மடிக்கணினி வழங்கும் திட்டம் சற்று சரிவை சந்தித்தது. இது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது உலக அளவில் நிலவும் பொருளாதார மந்த நிலை காரணமாக கொள்முதலில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகிறது. அதனால், மடிக்கணினி வழங்கும் திட்டம் சற்று தாமதமாகிறது என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
தற்போது மடிக்கணினி வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டு விட்டதா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது குறித்து இன்று விளக்கம் அளித்துள்ள பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அரசு பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை நிறுத்தும் எண்ணம் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தற்போதைய நிதி நிலைமைக்கு ஏற்ப மடிக்கணினி வழங்கும் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவோம் என்றும் உறுதியளித்துள்ளார்.