
“பெண்களுக்கான இலவச மின்சார ஸ்கூட்டர் திட்டம்”…!! எப்போ அமலுக்கு வருதுன்னு தெரியுமா..?? முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…
தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் முதல்வர் ரேவந்த் ரெட்டி வெற்றி பெற்றார். மேலும், “அவர் தேர்தல் வாக்குறுதியின் போது, 18 வயது நிரம்பிய பெண்களுக்கு ‘இலவச மின்சார ஸ்கூட்டர் வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படும்” என்று அறிவித்திருந்தார். அதேபோல், “வேலையில்லாத இளைஞர்களுக்கு ரூ. 4,000 உதவித்தொகை வழங்கப்படும்” என்றும் தெரிவித்திருந்தார்.
2025 IPL தொடருக்கான அட்டவணை வெளியீடு…!! போட்டிகள் குறித்த முழு விவரங்கள் உள்ளே..!!
அதன்பின், தற்போது ஒரு ஆண்டு ஆட்சி செய்த பிறகும் அவர் இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை. இதனால், தெலுங்கானா மாநிலத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் விரைவில் இந்த இரண்டு திட்டங்களையும் செயல்படுத்த கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு, “தெலுங்கானா முதல்வர் விரைவில் இலவச மின்சார ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுப்பதாக” தெரிவித்துள்ளார்.

























