உங்களின் வித்ட்ராவல் பணம் ATM இல் சிக்கி கொண்டதா..?? அப்போ உடனே இதை செய்யுங்க..!!
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக டிஜிட்டல் பரிமாற்றத்தின் பயன்பாடு நம்பமுடியாத அளவிற்கு அதிகரித்துள்ளது. மேலும், இளம் வயதினர் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் பயன்படுத்துவதற்கு எளிதாக உள்ளதால் அனைத்து பரிமாற்றத்திற்கும் UPI மூலமே பணம் செலுத்துகின்றனர். இருப்பினும் சில சமயங்களில் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக பணம் செலுத்துவதில் சிரமம் ஏற்படுவதால் சிலர் ATM சேவையை நாடுகின்றனர்.இந்நிலையில் ATM இல் பணம் எடுக்கும் போது சில சிக்கல்களை சந்திக்க நேரிடும்.
அதிலும் குறிப்பாக ATM இயந்திரத்தில் இருந்து பணம் வரவில்லை ஆனால் வங்கி கணக்கில் இருந்து டெபிட் செய்யப்பட்டது என செய்தி வந்தால் நீங்கள் பதற்றப்பட தேவையில்லை. இதுபோன்ற சூழ்நிலையில் நீங்கள் சில முக்கியமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். முதலில் நீங்கள் பணம் எடுத்த ரசீதைப் பத்திரமாக வைத்திருங்கள். ஒருவேளை பணம் வரவில்லை என்றால், புகார் செய்ய இது உதவியாக இருக்கும். அதன் பிறகு நீங்கள் உங்கள் வங்கியின் வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொண்டு பரிவர்த்தனை ID, நேரம், தேதி, ATM கிளை மற்றும் வங்கி கணக்கு எண் ஆகியவற்றைத் தெரிவித்து புகார் ID-யை குறித்து வைக்கவும். மேலும், நீங்கள் புகார் அளித்த 5-7 நாட்களில் பணம் திரும்ப கிடைக்கக்கூடும். இல்லையெனில் வங்கியில் “வாடிக்கையாளர் குறைதீர்க்கும்” பிரிவில் நேரடியாக புகார் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


























