
சேமிப்பு கணக்கு வைத்து இருப்பவர்களுக்கு செக்.. இதை செய்தால் வருமான வரித் துறையிடமிருந்து நோட்டீஸ் உறுதி..
பணத்தை சேமிப்பது என்பது நீங்கள் கடைப்பிடிக்க கூடிய மிக முக்கியமான நிதி பழக்கங்களில் ஒன்றாகும். மேலும், பணத்தை வங்கியில் சேமிப்பது உங்கள் எதிர்பாராத மற்றும் அவசர நிலை செலவுகளைச் சமாளிக்க உதவும். இந்நிலையில் வரி விதிகளின்படி, ஒரு நிதியாண்டில் சேமிப்புக் கணக்கில் மொத்த ரொக்க வைப்பு அல்லது திரும்பப் பெறும் பணம் ரூ.10 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
மேலும், இந்த வரம்பை மீறினால் ஆய்வு மற்றும் அபராதம் விதிக்கப்படும். மேலும், ஒரு நிதியாண்டில் உங்கள் சேமிப்புக் கணக்கில் ரொக்க பரிவர்த்தனைகள் ரூ.10 லட்சத்தை தாண்டினால் அவற்றைக் கண்காணித்து, வருமான வரித் துறைக்கு வங்கிகள் புகார் அளிக்கும். இது தொடர்பாக வருமான வரித் துறையிடம் இருந்து நோட்டீஸ் வரும் பட்சத்தில், நிதி பரிவர்த்தனைக்கான வங்கி அறிக்கைகள், முதலீட்டு பதிவுகள் அல்லது பரம்பரை சொத்து தொடர்பான ஆவணங்களை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், தேவையற்ற சட்ட சிக்கல்களைத் தவிர்க்க மற்றும் வரிகள் குறித்து தெளிவு பெற ஒரு தொழில்முறை வரி ஆலோசகருடன் கலந்தாலோசிப்பது பயனளிக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.























