பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு – மாநில அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
நாடு முழுவதும் பல மாநிலங்களில் கோடை வெயில் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறக்கும் தேதி மாற்றப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு
இந்தியாவில் கொரோனா காலகட்டத்திற்கு பின் 2022-23 ஆம் கல்வியாண்டில் பள்ளிகள் வழக்கம் போல செயல்பட்டது. இந்நிலையில் தற்போது அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. அந்த வகையில் மேற்கு வங்காள அரசு கோடை வெயில் அதிகமாக இருப்பதால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலை பள்ளிகள் ஜூன் 5 ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என ஏற்கனேவே அறிவிக்கப்பட்டதை மாற்றி புது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழக பள்ளி மாணவர்களுக்கு அரசு பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் – போக்குவரத்து துறை புதிய உத்தரவு!
அதன் படி ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அந்த மாநிலத்தில் சுமார் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரித்ததால் கடந்த ஏப்ரல் மாதம் 16ம் தேதி முதல் ஒரு வார வகுப்புகள் நிறுத்தப்பட்டன. அதன் பின் மே 2 ஆம் தேதி தான் தேர்வுகளுக்கு பின் கோடை விடுமுறை விடப்பட்டது. தற்போது வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஜூன் 5 முதல் மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கு ஜூன் 7 முதல் பள்ளிகள் திறக்க பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது
Exams Daily Mobile App Download