தமிழக பள்ளி மாணவர்களுக்கு அரசு பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் – போக்குவரத்து துறை புதிய உத்தரவு!
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் ஜூன் 7 ஆம் தேதி திறக்கப்பட இருக்கும் நிலையில் அரசு பேருந்துகளில் சீருடையுடன் வரும் மாணவர்கள் இலவச பயணம் செய்யலாம் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
இலவச பயணம்
தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் அடுத்த மாதம் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது. இந்நிலையில் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை ஒரு பக்கம் நடந்து வரும் நிலையில் மறுபக்கம் பாட புத்தகங்கள் வழங்க ஏற்பாடு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பள்ளி சீருடைகளில் வரும் மாணவர்களுக்கு அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம் என போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் சென்ற கல்வியாண்டில் வழங்கப்பட்ட கட்டணமில்லா பேருந்து பயண அட்டையை காட்டி மாணவர்கள் பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
ஒரே நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
மேலும் பள்ளிக்கு வரும் மாணவர்கள் சீருடை அணிந்தும், அடையாள அட்டை வைத்திருந்தும் அவர்களை பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்டால் அவர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசின் இந்த அறிவிப்பு காரணமாக மாணவர்களின் கற்றல் இடைநிற்றல் தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Exams Daily Mobile App Download