ஓட்டுநர் & நடத்துனருக்கான தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு – அரசு போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு!!
தமிழகத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கான தேர்வு வினாத்தாள் மற்றும் மதிப்பெண் நாளை வெளியாகவுள்ளது.
தேர்வு முடிவுகள்:
தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள நடத்துனர் மற்றும் ஓட்டுநர் பதவிக்கான காலி பணியிடங்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில், எழுத்துத் தேர்வு மூலமாக தகுதியான நடத்துனர் மற்றும் ஓட்டுனர்களை தேர்வு செய்யும் பொருட்டு கடந்த 19ஆம் தேதி எழுத்து தேர்வு நடைபெற்றது. கிட்டத்தட்ட 9352 பேர் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பதவிக்கான எழுத்து தேர்வில் கலந்து கொண்டனர். இந்நிலையில், தேர்வில் கலந்து கொண்டவர்களின் விடைத்தாள் மற்றும் மதிப்பெண் நாளை காலை 9:30 மணி அளவில் வெளியிடப்பட இருப்பதாக அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் அறிவித்துள்ளார்.
TNPSC குரூப் 4 தேர்வின் வெற்றிக்கான படிகள் – தேர்வர்களின் கவனத்திற்கு!
அதாவது, ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பதவிக்கான தேர்வில் கலந்து கொண்டவர்கள் https://tancet.annauniv.edu/tancet/setc/index.php-என்கிற இணையதள பக்கத்தின் மூலமாக நாளை விடைத்தாளை சரிபார்த்துக் கொள்ளலாம். இந்த எழுத்து தேர்வு மதிப்பெண் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்பட்டு நேர்காணல் மூலமாக பணியிடம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.