தமிழகத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு வந்த சிக்கல் – கல்வித்துறை அதிரடி உத்தரவு!

0
தமிழகத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு வந்த சிக்கல் - கல்வித்துறை அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு வந்த சிக்கல் - கல்வித்துறை அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு வந்த சிக்கல் – கல்வித்துறை அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு உரிய விதிப்படி ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட கூடாது என தொடக்க கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

வெளியான உத்தரவு

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணிபுரிந்து ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு உரிய விதிப்படி ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதில் தாமதமாகாமல் உரிய முன்னேற்பாட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தொடக்க கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, தொடக்க கல்வி இயக்குனர் கண்ணப்பன் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருக்கிறார். அதில் கல்வித்துறையில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் வழங்குவது தாமதம் ஏற்படுவதாக சில மாவட்டங்களில் புகார் வந்துள்ளது.

TNPSC உதவி பொறியாளர் பதவியை பெற வேண்டுமா? – நீங்கள் செய்ய வேண்டியது என்னென்ன?

மேலும் பொது வைப்பு நிதியான ஜி.பி.எப்., முதிர்வு தொகைக்கு கருத்துரு அனுப்பவும், மாவட்ட அலுவலகங்களில் கால தாமதம் ஆவதாக ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இது இனி வரும் காலத்தில் தவிர்க்கப்பட வேண்டும். தொடக்க கல்வி பிரிவின் கீழ் செயல்படும் பள்ளிகளில் மட்டும், அடுத்த ஆண்டு, மே மாதத்திற்குள் 1,892 பேர் ஓய்வு பெறும் நிலையில் உள்ளனர். அவர்களுக்கு இந்த பலன்கள் காலதாமதமின்றி கிடைக்க உரிய கோப்புகள் தயாரிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!