டானா புயல் எதிரொலி.., தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. முக்கிய எச்சரிக்கை!!
வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டிருந்த டானா புயல், வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தீவிர புயலாக வலுபெற்றது. இந்த புயல் இன்று (அக்டோபர் 24) நள்ளிரவு முதல் நாளை (அக்டோபர் 25) காலை வரையிலான நேரத்தில் ஒடிசா, மேற்குவங்கம் இடையே புரி- சாகர் தீவையாெட்டி கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தீபாவளி பரிசாக இலவச கேஸ் சிலிண்டர்…!! ” அரசின் அசத்தல் அறிவிப்பு”..!!
இதன் காரணமாக தமிழகத்தில் இன்று (அக்டோபர் 24) திருப்பூர், திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், வரும் அக்டோபர் 29ம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது.


























