தமிழகத்தில் ஏப்ரல் 15 ஆம் தேதி விடுமுறை.. ஆட்சியர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு..!!
தமிழகத்தில் உள்ள ஒரு சில மாவட்டங்களில் நடைபெறும் முக்கியமான திருவிழாக்கள் அல்லது சுவாமி வழிபாடுகள் காரணமாக, அப்பகுதியை சார்ந்த மக்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் தேர் திருவிழா ஆனது வெகு விமரிசையாக நடைபெறும். மேலும், இத்திருவிழாக்கான கொடியேற்றம் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்றது.
மத்திய அரசில் Young Professional வேலை – மாத ஊதியம்: ரூ.42,000/- || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!
அந்த வகையில் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெறும் திருவிழாவை முன்னிட்டு வரும் ஏப்ரல் 15ம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்படும் என ஆட்சியர் பிரதீப் குமார் அறிவித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் அடுத்த மாதம் அதாவது மே 3 ஆம் தேதி சனிக்கிழமை அன்று பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் வழக்கம்போல் செயல்படும் என்று உத்தரவிட்டுள்ளார்”.


























