ரமலான் பண்டிகை முன்னிட்டு… 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டுத்தேர்வுக்கு மாற்றுத்தேதி

0
ரமலான் பண்டிகை முன்னிட்டு... 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டுத்தேர்வுக்கு மாற்றுத்தேதி
ரமலான் பண்டிகை முன்னிட்டு... 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டுத்தேர்வுக்கு மாற்றுத்தேதி

ரமலான் பண்டிகை முன்னிட்டு… 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டுத்தேர்வுக்கு மாற்றுத்தேதி

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 22ம் தேதி அன்று ரமலான் பண்டிகையை முன்னிட்டு 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டுத்தேர்வை மாற்றுத்தேதியில் நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

ஆண்டுத்தேர்வு

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய காலண்டரின் 9வது மாதத்தில் கொண்டாடப்படுவது வழக்கமாகும். இந்த பண்டிகை கொண்டாடப்படுவதற்கு முன்பு இஸ்லாமியர்கள் அனைவரும் 29 அல்லது 30 நாட்கள் வரை நோன்பு இருப்பார்கள். அதன்படி தமிழகத்தில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ரமலான் நோன்பு தொடங்கப்பட்டது.

நடப்பு ஆண்டு தென் மேற்கு பருவமழை எப்படி இருக்கும்? வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!

இதையடுத்து வருகிற ஏப்ரல் 22ம் தேதி அன்று ரமலான் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டுத்தேர்வு ஏப்ரல் 18ம் தேதி முதல் ஏப்ரல் 28ம் தேதி வரை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்களால் சரிவர தேர்வு எழுத முடியாது.
அதனால் ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுத்தேர்வை மாற்றுத்தேதியில் நடத்த வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்

Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!