தமிழகத்தில் வரும் மே 15 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை.. சற்று முன் வெளியான முக்கிய தகவல்..!!
தமிழகத்தில் உள்ள குறிப்பிட்ட சில மாவட்டங்களில் நடைபெறும் முக்கியமான நிகழ்வுகள் காரணமாக அப்பகுதியை சார்ந்த மக்களுக்கு அவ்வப்போது உள்ளூர் விடுமுறை அளிப்பது வழக்கம். அந்த வகையில், நீலகிரி மாவட்டம், ஊட்டியில் அரசு தாவரவியல் பூங்காவில், 127வது மலர்கண்காட்சி வருகின்ற மே 15 ஆம் தேதி முதல், 21ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்ட்டுள்ளதாகவும் இந்த மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் உதகையில் நடைபெற உள்ள மலர் கண்காட்சி முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு வரும் மே 15 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிப்பதாக என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்ய தன்னீரு அறிவித்துள்ளார். மேலும், இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மே 31 ஆம் தேதி சனிக்கிழமை அன்று வேலை நாளாக செயல்படும் என்றும் தெரிவித்தார்.
























