தமிழகத்தில் டிச.3 உள்ளூர் விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள கோட்டாறு புனித சவேரியார் பேராலயத் திருவிழாவை முன்னிட்டு வரும் டிசம்பர் 3ம் தேதி அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் அரசு அலுவலகங்கள், அனைத்து கல்வி நிறுவனங்ககளுக்கும் விடுமுறை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உள்ளூர் விடுமுறை:
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் பல்வேறு சிறப்பு வாய்ந்த திருத்தலங்கள் உள்ளது. இந்த திருத்தலங்களில் ஆண்டுதோறும் திருவிழாக்களும் நடைபெறுகிறது. அன்றைய தினம் மற்ற மாவட்ட மற்றும் வெளிமாநில மக்களும் வந்து கலந்து கொள்வர். இந்த தினத்திற்கு மாவட்ட ஆட்சியர்கள் உள்ளூர் விடுமுறையை அளிப்பர். அந்த வகையில் அண்மையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் மகா கார்த்திகை திருவிழா முன்னிட்டு அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் டிச.31 வரை நீட்டிப்பு – மத்திய அரசு அறிவிப்பு!
அதனை தொடர்ந்து தற்போது கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள கோட்டாறு புனித சவேரியார் பேராலயத்தில் 2021 ம் ஆண்டுக்கான திருவிழா நடைபெறவுள்ளது. இந்த புகழ் பெற்ற பேராலய திருவிழாவில் வெளிநாடுகளில் இருந்து மக்கள் வந்து கலந்து கொண்டு விழாவை சிறப்பிப்பர். டிசம்பர் மாதத்தில் திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் விமர்சையாக கொண்டாடப்படும். கடந்த வருடம் கொரோனா தாக்கம் காரணமாக பக்தர்கள் அனுமதி மறுக்கப்பட்டு எளிமையான முறையில் திருவிழா நடைபெற்றது.
டிசம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு – கொரோனா பரவல் எதிரொலி! மாநில அரசு அறிவிப்பு!
இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த நவம்பர் மாதம் 24ம் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினமும் காலை மற்றும் மாலையில் பேராலயத்தில் திருப்பணி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி நாளை மறுநாள் (03.12.2021) நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு டிசம்பர் 3ம் தேதி அம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்ய டிசம்பர் 11-ம் தேதி வேலை நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.