நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் டிச.31 வரை நீட்டிப்பு – மத்திய அரசு அறிவிப்பு!
உலக நாடுகளை தற்போது உருமாறிய ஒமைக்ரான் கொரோனா தொற்று அச்சுறுத்தி வருகிறது. அதனால் நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகளை வரும் டிச.31ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கட்டுப்பாடுகள் நீட்டிப்பு:
உலக நாடுகளில் கடந்த ஆண்டு பரவிய கொரோனா தொற்று அச்சுறுத்தல் தற்போது வரை பல்வேறு நாடுகளில் இருந்து வருகிறது. அதிலும் சில பகுதிகளில் உருமாறிய கொரோனா தொற்று அதாவது டெல்டா, டெல்டா பிளஸ் உள்ளிட்டவை இடைப்பட்ட நாட்களில் பரவியது குறிப்பிடத்தக்கது. ஒரு சில நாடுகள் கொரோனா தடுப்பூசி செலுத்துவது, கொரோனா கட்டுப்பாடுகள் அடிப்படையில் பெருந்தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அதனால் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு – கொரோனா பரவல் எதிரொலி! மாநில அரசு அறிவிப்பு!
இந்நிலையில் மீண்டும் உருமாறிய ஒமைக்ரான் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது மற்ற வகை கொரோனாவை விட மிகவும் வீரியம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒமைக்ரான் வகை கொரோனா முதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. பின்னர் 10க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் அனைத்து நாடுகளிலும் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் நாளை (டிச.2) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
அந்த வகையில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பது குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் மாநில அரசு அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் இந்தியாவில் குறிப்பிட்ட நாடுகளுக்கு இடையேயான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு சில நாடுகளில் இருந்து வரும் நபர்களுக்கு பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து நாடு முழுவதும் இந்த ஆண்டு இறுதி வரை அதாவது வரும் டிச.31ம் தேதி வரை கொரோனா கட்டுப்பாடுகளை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.