டிசம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு – கொரோனா பரவல் எதிரொலி! மாநில அரசு அறிவிப்பு!
ஹரியானா மாநிலத்தில் உள்ள பள்ளிகள் இன்று (டிசம்பர் 1) முதல் 100% திறனுடன் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஒமிக்ரான் வைரஸின் புதிய மாறுபாட்டின் எச்சரிப்புகளை முன்னிட்டு இந்த உத்தரவை திரும்பப் பெறுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
பள்ளிகள் திறப்பு
கடந்த மாதங்களில் கொரோனா தொற்று நோய் பரவல் வீழ்ச்சியடைந்து வந்ததையடுத்து ஹரியானா மாநில அரசு இன்று முதல் அதாவது டிசம்பர் 1 முதல் 100% அல்லது முழு திறனுடன் பள்ளிகளை மீண்டும் திறக்க அனுமதி அளித்திருந்தது. ஆனால் தற்போது கொரோனா வைரஸின் புதிய மாறுபாடான ஒமிக்ரான் வைரஸின் தடுப்பு கட்டுப்பாடுகளை கவனத்தில் கொண்டு முழு திறனில் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான அனுமதியை அரசு திரும்பப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிச.16, 17 ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் – முக்கிய அறிவிப்பு!
அதனால் ஹரியானா மாநிலத்தில் உள்ள பள்ளிகள் இப்போது முன்பு போலவே 50% திறனில் தொடர்ந்து செயல்படும். மேலும் அடுத்த அறிவிப்பு வெளியிடப்படும் வரை அதில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் 100% திறனுடன் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான அனைத்து திட்டங்களும் நிறுத்தப்படும் என்பதை அனைத்து பள்ளிகளுக்கும் கல்வித்துறை தெரிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் டிசம்பர் 10 வரை மட்டுமே இந்த முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் சில அறிக்கைகள் கூறுகிறது.
தமிழக பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஆண்டு வருமான உச்ச வரம்பு உயர்வு!
என்றாலும் இதுபோன்ற சந்தர்ப்பங்களில், மாணவர்கள் மற்றும் பள்ளிகள், மாநில அரசு அல்லது கல்வித் துறையின் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலுக்காக காத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் 50% திறனில் ஆப்லைன் வகுப்புகளைத் தொடரவும் அரசு வலியுறுத்தியுள்ளது. தற்போது வரை ஒமிக்ரான் வைரஸின் பாதிப்புகள் இந்தியாவில் காணப்படவில்லை என்றாலும் மாநிலங்கள் தோறும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.