கடும் வெப்ப நிலையினால் அமலாகும் புதிய மாற்றங்கள் – அரசின் நடவடிக்கை!

0
கடும் வெப்ப நிலையினால் அமலாகும் புதிய மாற்றங்கள் - அரசின் நடவடிக்கை!

நடப்பாண்டில் அதிக வெப்பநிலையை கருத்தில் கொண்டு அரசு முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது.

நேர மாற்றங்கள்:

கோடைகாலம் நடப்பு ஆண்டில் மிகவும் அதிகபட்ச வெப்பநிலையை கொண்டுள்ளது. வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது. இந்நிலையில் பேரிடர் துறையானது பல்வேறு துறைகளுக்குமான நேர மாற்றங்களை தற்போது அறிவித்துள்ளது.

  • அதன்படி வெப்பம் அதிகமாக உள்ளதால் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளை காலை ஷிப்டில் இயக்க வேண்டாம் என்றும், அல்லது விரைவில் கோடை விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் கோடைகால சூழ்நிலையை கருத்தில் கொண்டு குறுகிய காலத்திற்கு பள்ளிகளை மூடவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் மற்றும் தேர்வு மையங்களில் குடிநீர் மற்றும் ஓஆர்எஸ் போன்றவற்றை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஞ்சல் துறையில் நல்ல வட்டி கிடைக்கும் சேமிப்பு திட்டம் – முழு விவரம் இதோ!

  • வெப்பத்தின் தாக்கத்தினால் ஏற்படும் நோய்களுக்கு விரைவில் தீர்வை காணும் வகையில் மருத்துவமனைகளில் போதிய அளவிலான முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
  • நிலத்தடி நீர்மட்டத்தை தொடர்ந்து ஆய்வு செய்து கண்காணிக்க வேண்டும் என்று சுகாதாரப் பொறியியல் துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
  • வெயில் காலத்தில் தொழிலாளர்களின் வேலை நேரம் காலை 6 மணி முதல் 11 மணி வரையும், மாலை 3:30 மணி முதல் ஆறு முப்பது 6:30 மணி வரையிலும் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அதிகபட்ச வெப்ப சலனத்தை குறைக்கும் வகையில் பொது போக்குவரத்துகளின் இயக்கத்தை காலை 11 மணி முதல் மாலை 6:30 மணி வரை கட்டுப்படுத்த உத்தரவிட்டுள்ளது.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!