அஞ்சல் அலுவலகத்தில் உள்ள திட்டங்களில் சிறந்த சேமிப்பு திட்டம் குறித்த முழு விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
சேமிப்பு திட்டம்
நல்ல பாதுகாப்பான மற்றும் உத்தரவாதமளிக்கப்பட்ட முதலீடு திட்டம் என்பது அஞ்சலக சேமிப்பு திட்டம் தான். இதில் சிறந்த வட்டி விகிதம் கிடைப்பதால், சில வருடங்களில் முதலீடு செய்யப்பட்ட தொகையை விட இரண்டு மடங்கு அதிகமாக பணம் கிடைக்கும். போஸ்ட் ஆஃபீஸ் எஃப்டி போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் திட்டம் குறித்த விவரங்களை பார்க்கலாம். இதில் 1, 2,3, மற்றும் 5 ஆண்டுகளுக்கான FD திட்டங்கள் இருக்கின்றன.
மேலும் 5 வருட வரி இல்லாத FDக்கு நல்ல வட்டி கிடைக்கும். இந்தத் திட்டத்தில் நீங்கள் பணத்தை முதலீடு செய்தால், சில வருடங்களில் அது இரட்டிப்பாகும். போஸ்ட் ஆஃபீஸ் எஃப்டியின் வட்டி விகிதங்கள் என்ன என்பதையும், இதன் மூலம் எவ்வளவு தொகையை இரட்டிப்பாக்க முடியும் என கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை TCS நிறுவனத்தில் பணிபுரிய வேண்டுமா? அப்போ உடனே விண்ணப்பியுங்கள்!
அதாவது ஒரு வருட கணக்கில் – ஆண்டுக்கு 6.9% வட்டி, இரண்டு வருட கணக்கில் – ஆண்டுக்கு 7.0% வட்டி, மூன்று வருட கணக்கில் – 7.1% ஆண்டு வட்டி, ஐந்தாண்டு கணக்கில் வட்டி – ஆண்டுக்கு 7.5% கிடைக்கும். அதாவது 5 ஆண்டுகளுக்கு 5 லட்சத்தை டெபாசிட் செய்தால் 7.5 சதவீத வட்டியில் ரூ.2,24,974 மொத்தம் ரூ.7,24,974 கிடைக்கும். ஆனால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்தத் தொகையை மீண்டும் நிர்ணயம் செய்யும் போது, 7.5 சதவீத வட்டி விகிதத்தில், வட்டியாக ரூ.3,26,201 என மொத்தம் ரூ.10,51,175 கிடைக்கும்.