தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு வெப்ப அலை வீசும் – வானிலை எச்சரிக்கை!

0
தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு வெப்ப அலை வீசும் - வானிலை எச்சரிக்கை!

சென்னை வானிலை ஆய்வு மையமானது தமிழக மக்களுக்கான வானிலை எச்சரிக்கை குறித்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

வானிலை எச்சரிக்கை:

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவியுள்ளது. மேலும் அதிகபட்சமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களின் 10 இடங்களில் 40 முதல் 41.5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும், வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலை தேடுபவரா? Teaching துறையில் முன் அனுபவம் இருக்கா? – உடனே அப்ளை பண்ணுங்க!

இதனால் பொதுமக்கள் தேவையான முன்னேற்பாடு நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர ஏப்ரல் 8ம் தேதி முதல் 12ஆம் தேதி வரை தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கான வானிலை எச்சரிக்கை அறிவிப்புகள் எதுவும் இன்றைய அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!