தமிழகத்தில் இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறப்பு – தலைமை செயலாளர் நேரடி ஆய்வு!
தமிழகத்தில் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று மீண்டும் திறக்கப்பட உள்ளது.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் டிசம்பர் மாத தொடக்கம் முதல் வங்கக்கடலில் உருவான புதிய அதி தீவிர மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை கொட்டி தீர்த்தது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய ஐந்து மாவட்டங்களில் கனமழையின் காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். வெள்ள நீர் மாவட்டங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.6000த்துடன் கூடுதலாக ரூ.1000 வழங்க திட்டம் – பொதுமக்கள் ஹாப்பி!!
இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக பள்ளி, கல்லூரிகளுக்கு 9 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் டிசம்பர் 11ம் தேதி ஆன இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் கடந்த வாரம் முதல் நடந்து வந்தது. இந்நிலையில் இன்று திறக்கப்பட்ட பள்ளிகளை நேரில் ஆய்வு செய்ய சென்னை கிண்டியில் உள்ள சென்னை மேல்நிலைப்பள்ளியில் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா அவர்கள் நேரில் சென்று ஆய்வு நடத்தியுள்ளார்.