தமிழக பள்ளிகளுக்கு பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதில் தாமதம் – காரணம் இது தான்!!
தமிழகத்தில் மழைக்காலங்களில் பள்ளிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதில் தாமதம் ஆகிறது. இந்த பராமரிப்பு பணிகள் எதனால் தாமதமாக நடைபெறுகிறது என தொடக்கப்பள்ளி ஆசிரியர் விளக்கம் தெரிவித்துள்ளார்.
பராமரிப்பு பணிகள்
தமிழகத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் (சமக்ரா சிக்ஷா அபியான்) மாணவர்களுக்கு தேவையான வசதிகளை செய்வதற்கான நிதியை வழங்கி வருகிறது. இந்த நிதியை பயன்படுத்தி பள்ளிகளில் மாணவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட வேண்டும். அதாவது, பள்ளி கட்டிடங்களில் ஏற்படும் பழுதுகள், குடிநீர் வசதி, மின்சார பராமரிப்பு, கழிப்பறை வசதி, கற்பித்தலுக்கு தேவையான பொருட்கள் வாங்குதல் உள்ளிட்ட வசதிகளை செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது.
Exams Daily Mobile App Download
மேலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு ஒவ்வொரு ஆண்டும் நிதி வழங்கப்படுகிறது. மேலும் இதனை அந்த நிதி ஆண்டுக்குள் மட்டுமே செலவழிக்க வேண்டும். ஆனால் இந்த நிதியானது தாமதமாக வழங்கப்படுவதால் முறையாக பயன்படுத்த முடியவில்லை என பள்ளி ஆசிரியர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். மேலும் இது தொடர்பாக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூறியதாவது, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியானது ஒவ்வொரு பள்ளிகளுக்கும் கட்டாயமாக தேவைப்படுகிறது.
HDFC, ICICI, SBI, PNB வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ஏடிஎம் கட்டண விவரம் இதோ!
Follow our Instagram for more Latest Updates
இதனை நிதியாண்டின் தொடக்கத்தில் அனுப்புவதன் மூலமாக மாணவர்களுக்கு தேவையான வசதிகளை முறையாக செய்து தர முடியும். அத்துடன் மழைக் காலங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.