டிச.12 ம் தேதி 3 மாவட்டங்களில் விடுமுறை – இடைத்தேர்தல் எதிரொலி!
டிசம்பர் 12ஆம் தேதி நடக்க உள்ள இடைத்தேர்தல் காரணமாக கேரள மாநிலத்தில் மூன்று மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.
இடைத்தேர்தல்:
கேரளா மாநிலத்தில் திருவனந்தபுரம், கொல்லம், கோழிக்கோடு உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் டிசம்பர் 12ஆம் தேதி அன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதன் காரணமாக டிசம்பர் 12ஆம் தேதி அன்று மூன்று மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. களத்தூர் கிழக்கு வார்டு, கிராம பஞ்சாயத்து வார்டு, விளங்கரா மற்றும் கொட்டாங்கரை கிராம பஞ்சாயத்து ஆகிய அனைத்து கல்வி நிறுவனங்கள் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் தேவிதாஸ் உத்தரவிட்டுள்ளார்.
ஒரே நாளில் தங்கத்தின் விலை ரூ.560 சரிவு – இது தான் நகை வாங்க சரியான நேரம்!!
மேலும் அருவிக்கரை கிராம பஞ்சாயத்தில் டிசம்பர் 11 மற்றும் 12ஆம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த மூன்று மாவட்டங்களுக்கும் வாக்கு எண்ணிக்கை 13ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இடைத்தேர்தல் நடைபெறும் மூன்று மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் மற்றும் அலுவலகங்களும் இதன் காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.