அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வை அறிவித்த மாநிலங்கள் – பட்டியல் விவரங்கள்!

0
அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வை அறிவித்த மாநிலங்கள் - பட்டியல் விவரங்கள்!
அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வை அறிவித்த மாநிலங்கள் - பட்டியல் விவரங்கள்!
அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வை அறிவித்த மாநிலங்கள் – பட்டியல் விவரங்கள்!

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை மாநில வாரியாக அரசுகள் வெளியிட்டு வருகிறது. இது குறித்த விவரங்கள் இப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகவிலைப்படி உயர்வு:

மத்திய அரசு 2023 ஜூலை முதல் டிசம்பர் மாதங்களுக்கான அகவிலைப்படி உயர்வு அக்டோபர் மாத இறுதியில் அதிகாரப்பூர்வமாக நான்கு சதவீதங்கள் உயர்த்துவதாக அறிவித்தது. மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து மாநில அரசுகள் வரிசையாக அகவிலைப்படி உயர்வு குறித்தான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நான்கு சதவீத டிஏ உயர்த்தப்பட்டு 46 சதவீதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

ஜூலை முதல் நவம்பர் வரையிலான மாதங்களுக்கான அகவிலைப்படி உயர்வு ரொக்கப் பணமாக வழங்கப்படும் என்றும், டிசம்பர் மாத ஊதியத்துடன் செலுத்தப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. இதே போல் அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு DA 4 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளதாக முதல்வர் பெமா காண்டு அறிவித்துள்ளார். தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக அறிவிக்கப்பட்ட இந்த டிஏ உயர்வு நிலுவைத் தொகை ரொக்க பணமாக ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு டிச. 22 சம்பளம் – மத்திய அரசு உத்தரவு!

சண்டிகர் மாநிலத்திலும் அரசின் அகவிலைப்படி உயர்வு காரணமாக சுமார் 20,000 பணியாளர்கள் பயனடைவார்கள் என்று அரசு தெரிவித்திருந்தது. கர்நாடகாவில் 3.75% DA உயர்த்தப்பட்டு அகவிலைப்படி 38.75 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளது. தமிழக அரசு ஜூலை 1 முதல் 4 சதவீத அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தற்போது தமிழக அரசு ஊழியர்கள் 46 சதவீத அகவிலைப்படி பெற்று வருகிறார்கள்.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!