வீட்டு உபயோக சிலிண்டர் ரூ.500க்கு விற்பனை – இதை உடனே முடியுங்க!! டிச.31 கடைசி நாள்!!
வீட்டு உபயோக சிலிண்டரை ரூ.500க்கு பெற கட்டாயமாக டிச.31 ஆம் தேதிக்குள் KYC முடித்திருக்க வேண்டும்.
சிலிண்டர்:
தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கான இலவச பேருந்து திட்டம், சிலிண்டர் ரூ.500க்கு விற்பனை என ஏகப்பட்ட வாக்குறுதிகள் வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில், மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததையடுத்து பெண்களுக்கான இலவச பேருந்து திட்டம் இன்று அமலுக்கு வந்துள்ளது. இதனை தொடர்ந்து கூடிய விரைவில் சிலிண்டர் விலையை ரூ.500 ஆக குறைப்பதற்கான திட்டமும் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.2,500 நிவாரணத்தொகை – அரசின் சூப்பர் அறிவிப்பு!
ஏற்கனவே, மத்திய அரசு வீட்டு உபயோக சிலிண்டரின் விலையை ரூ.200 குறைத்துள்ளது. இது போக, பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டர்களுக்கு மானியமாக ரூ.300 வழங்கபட்டு வருகிறது. இந்த சலுகைகளை பெற கேஒய்சி புதுப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கேஒய்சி புதுப்பிப்பதற்கான கடைசி நாள் டிச.31 என்பதால் பொதுமக்கள் அனைவரும் மாவட்ட மையத்தில் உள்ள காஸ் ஏஜென்சிகளில் குவிந்து வருகின்றனர்.