சேப்பாக்கத்தில் இன்று கடைசி CSK போட்டி – ரசிகர்களுக்கு நன்றி சொல்லும் விழா ஏற்பாடு!

0
 சேப்பாக்கத்தில் இன்று கடைசி CSK போட்டி – ரசிகர்களுக்கு நன்றி சொல்லும் விழா ஏற்பாடு!

சென்னை சேப்பாக்கத்தில் இன்று இரவு சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் பலப்பரிட்சை செய்ய உள்ளன. இந்த சீசனில் சென்னை அணி சேப்பாக்கத்தில் விளையாடும் கடைசி போட்டி இது தான். அதனால் அதனை வெற்றியுடன் நிறைவு செய்ய வேண்டும் என்று வீரர்கள் மற்றும் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

பணம் கொடுத்து வேலை வாங்கிய 36,000 ஆசிரியர்கள் பணி நீக்கம் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

குறிப்பாக இந்த சீசனுடன் டோனி IPL தொடரில் இருந்து ஓய்வு பெற்று விட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. இந்த நிலையில் இன்று சேப்பாக்கத்தில் ஒரு நிகழ்ச்சி நடத்த இருப்பதாக புதிய தகவல் வந்துள்ளது.

அது குறித்து, CSK அணி நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், சென்னை-கொல்கத்தா போட்டி முடிந்த உடன் ரசிகர்களுக்கு நன்றி சொல்லும், நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் டோனி கலந்து கொள்வார் என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் தயாராகி வருகின்றனர்.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!