பணம் கொடுத்து வேலை வாங்கிய 36,000 ஆசிரியர்கள் பணி நீக்கம் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
மேற்கு வங்க மாநில உயர்நீதிமன்றம் முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களை பணி நீக்கம் செய்வதாக உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவு:
2016ம் ஆண்டு 42,500 ஆசிரியர்களை பணி நியமனம் செய்வதற்கு மேற்கு வங்க அரசு உத்தரவிட்டிருந்தது. இதில், தற்போது வரை 140 ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. இதுதொடர்பாக, அவர்கள் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் விசாரணையில் 6,500 பேர் மட்டுமே முறையாக ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள்.
அதி தீவிர புயலாக கரையை கடக்கும் “மோகா”..தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பநிலை – வானிலை அறிக்கை!
மீதம் உள்ள 36,000 பேர் முறைகேடாக பணம் கொடுத்து வேலை வாங்கியுள்ளது தெரிய வந்துள்ளது. இதனால், இவர்களை உடனடியாக பணிநீக்கம் செய்ய கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இவர்களுக்கு பதிலாக தகுதிவாய்ந்த ஆசிரியர்களை நியமனம் செய்யவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download