இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு 1.33 கோடி பேர் முன்பதிவு – முதல் நாள் பதிவு முடிவு!!
நாடு முழுவதும் மூன்றாம் கட்ட கொரோனா தடுப்பூசிக்கான முன்பதிவு நேற்று (ஏப்ரல் 28) முதல் துவங்கியது. ஒரு நாளில் மட்டும் 1.33 கோடி பேர் பதிவு செய்துள்ளனர்.
கொரோனா தடுப்பூசி
இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. அந்த வகையில் கொரோனா முன்கள பணியாளர்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டு கட்டமாக கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. தவிர நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மே 1 முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. மத்திய அரசின் அறிவிப்பின்படி தமிழகத்திலும் மே 1 முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
TN Job “FB Group” Join Now
இதன்படி மூன்றாம் கட்ட கொரோனா தடுப்பூசிக்கான முன்பதிவு நேற்று முதல் துவங்கியது. தடுப்பூசி செலுத்திக்கொள்ள விருப்பம் உள்ளவர்கள் Aarogya Setu செயலி, CoWIN மற்றும் UMANG செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று துவங்கிய இந்த முன்பதிவில் மாலை 4 மணி முதல் 7 மணி வரையுள்ள 3 மணி நேரத்தில் 80 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். இந்த CoWIN தளத்தில் மாலை 4 மணி அளவில் கொரோனா தடுப்பூசி முன்பதிவு துவங்கியது. முன்பதிவு துவங்கிய சில மணி நேரத்திலேயே அந்த இணையதளத்தில் சிக்கல்கள் இருப்பதாக சமூக வலைதளங்களில் புகார் எழுந்தது.
ஏப்ரல் 30 முதல் மே 14 வரை பகுதி நேர ஊரடங்கு – மாநில அரசு அறிவிப்பு!!
புகார்கள் எழுந்த சில நிமிடங்களில் அந்த சேவைகள் மீண்டுமாக துவங்கின. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை தெரிவிக்கையில், ‘மத்திய அரசின் CoWIN போர்டல் மூலமாக துவங்கிய முன்பதிவில் 14 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்ட 80 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். துவக்கத்தில் முன்பதிவு போர்ட்டலில் சில சிக்கல்கள் எழுந்தாலும் அது சில நிமிடங்களிலேயே சரி செய்யப்பட்டது. நாடு முழுவதும் 1.33 கோடி பேருக்கு அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர்’ என கூறியுள்ளது. மேலும் முன்பதிவு துவக்கத்தில் ஒவ்வொரு நிமிடத்துக்கும் 2 மில்லியன் பதிவுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.